Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நபிவழி மன்றம் சார்பில்; முப்பெரும் விழா

அக்டோபர் 16, 2021 05:13

திருப்பூர்;  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், நபிவழி மன்றம் சார்பில், நடத்தும் முப்பெரும் விழா, ஜின்னா மைதானம் அருகில் உள்ள நபிவழி மன்ற மைதானத்தில், தடகளம் மற்றும் கையுந்து போட்டிகள் நேற்று நடைபெற்றன.

இதில் வாலிபால் போட்டி நடைபெற்ற போது அலங்கியம் காவல்துறையினர் சார்பில், போட்டியில் கலந்து கொண்டனர்.

அப்போது காவல் துறையினர் அணியினர் சார்பில், போட்டிகள் துவங்கிய போது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. சசாங் சாய் அவர்கள் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விழாவினை சிறப்பித்தும், மேலும் இதில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ஜனாப் நாசர் உசேன், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் டாக்டர் கே.வி. சிவசங்கர் மற்றும் விளையாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்